என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஊழல் கண்காணிப்பு அதிகாரி
நீங்கள் தேடியது "ஊழல் கண்காணிப்பு அதிகாரி"
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நேற்று டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் கே.வி.சவுத்ரியை சந்தித்தார். #CBI #AlokVerma #KVChowdary
புதுடெல்லி:
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் அவர்களை பொறுப்பில் இருந்து விடுவித்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.
இந்த ஊழல் புகார்களை மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் விசாரித்து வருகிறார். இந்த விசாரணையை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நேற்று டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் கே.வி.சவுத்ரியை சந்தித்தார். அப்போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். மேலும் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் சரத் குமார் மற்றும் அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போல அஸ்தானாவும் மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனரை சந்தித்து பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் அவர்களை பொறுப்பில் இருந்து விடுவித்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.
இந்த ஊழல் புகார்களை மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் விசாரித்து வருகிறார். இந்த விசாரணையை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நேற்று டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் கே.வி.சவுத்ரியை சந்தித்தார். அப்போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். மேலும் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் சரத் குமார் மற்றும் அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போல அஸ்தானாவும் மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனரை சந்தித்து பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X